சென்னை ஜிஎஸ்டி சாலையில் சென்ற காரில் திடீர் தீ: போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது.
சென்னை மீனம்பாக்கம் பகுதி ஜி.எஸ்.டி. சாலையில் இன்று ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது அந்த சாலையில் சென்ற ஒரு கார் திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. உடனே காரில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று கீழே குதித்தனர். இதனால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கார் தீப்பிடித்தது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். கார் பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டதால் தான் தீப்பிடித்தது என்று கூறப்படுகிறது.
பரபரப்பான சாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications