மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - அமர்க்கள தொடக்கம்! 500 காளைகள் பங்கேற்பு!!
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலில் மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான காளைகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இளைஞர்கள் போட்டி போட்டு காளைகளை அடக்கி ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றனர். இந்த இரண்டு போட்டிகளிலும் சுமார் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. முதலில் அலங்காநல்லூர் கோவில் காளை வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து சென்றது. இதிலும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிலிருந்தும் காளைகள் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications