ஜூன் மாசத்துல இருந்து கரண்ட் கட் ஆகாதாம்.. நத்தம் விஸ்வநாதன் சொல்கிறார்!

கோவையில் மின்சாரம் தொடர்பான கண்காட்சியை அமைச்சர் நத்தம் விஸ்வநாதம் தொடக்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 925 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் பட்சத்தில்,கூடுதலாக கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 4 ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் தேவையை பூர்த்தி செய்ய இயலும். வரும் ஜூன் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் மின்வெட்டு படிப்படியாக குறையும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேட்டூர், வல்லூர், வட சென்னை, நெய்வேலி ஆகிய இடங்களில் அனல் மின் உற்பத்தி மூலம் 3 ஆயிரத்து 312 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
சமச்சீர் மின்வெட்டு
தொழில் அமைப்புக்கள் கோருவது போல சமச்சீர் மின் வெட்டு அமல்படுத்தினால் பயன் எதுவும் இருக்காது. சமச்சீர் மின் வெட்டை அமல்படுத்தினால் 180 மெகாவாட் மின்சாரமே கிடைக்கும் என்றும், இதனால் 20 நிமிடங்கள் மட்டுமே பயன்பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications