Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊழலுக்கு காரணம் ஒடுக்கப்பட்டோரே- ஆசிஷ் நந்திக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு!

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்/டெல்லி; நாட்டின் ஊழலுக்குக் காரணமே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்தான் என்று பேசிய சமூகவியலாளர் ஆசிஷ் நந்தி மீது ஜெய்ப்பூரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் பேசிய ஆசிஷ் நந்தி, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் ஊழலுக்குக் காரணம். அவர்கள் அதிகாரத்துக்கு வந்ததன் வினைதான் ஊழல். ஆனால் மேற்குவங்கத்தில் ஊழல் இல்லாதிருப்பதற்கு காரணம் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்று ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.

அவரது இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு உருவானது. காங்கிரஸ், பாஜக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் ஆசிஷ் நந்தியை கைது செய்ய வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட- பழங்குடியின அமைப்பு நிர்வாகி ராஜ்பால் மீனா கொடுத்த புகாரின் பேரில் அம்மாநில அரசு ஆசிஷ் நந்தி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+