வடபழனியில் களைகட்டிய தைப்பூசம்- மிளகாய்ப் பொடி அபிஷேகம் பார்த்து சாமியாடிய பக்தர்கள்
சென்னை: சென்னை வடபழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருநாளையொட்டி காவடிகள் எடுத்து நேர்த்தின் கடன்கள் செலுத்த பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்திருக்கின்றனர்.
வடபழனி முருகன் கோவலில் தைப்பூசத்தையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் முன்பு அம்மன் கோவில் தெருவில் மிளகாய் பொடி குடம், குடமாக தலையில் கொட்டப்பட்டு ஒருவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அபிஷேகம் நடந்தபோது அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தில் பலர் சாமி ஆடினர்.இதில் முருக பக்தர் ஒருவர் படுத்திருந்த நிலையில் அவர் மேல் உரலை வைத்து அதில் பெண்கள் மஞ்சள் இடித்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்கள் சுமந்து வந்த காவடி தீர்த்தங்கள் மற்றும் பால்குடங்களால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications