இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்த ஹபீஸ் சையத் கோரிக்கை!!
பாகிஸ்தான்: இந்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறுவதுபோல் இந்தியாவில் செயல்படும் இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையான ஹபீஸ் சையத் கூறியுள்ளார்.
மும்பை தாக்குதலின் மூளையான ஹபீஸ் சையத், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜமாத் உத் தவா என்ற அமைப்பின் தலைவர். அண்மையில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தில் ஹபீஸ் சையதுக்கு தொடர்பிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹபீஸ் சையத், இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார். அவர் பாகிஸ்தானுக்கு வரட்டும் அவருக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்போம்.
இந்தியாவில் இந்து தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்குகின்றன என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். அந்த பயிற்சி முகாம்கள் மீது அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications