மக்கள் நினைத்தால் மத்தியில் அண்ணன் ஆட்சிதான்... நரேந்திரமோடியின் தம்பி கருத்து
கன்னியாகுமரி: மக்கள் மனது வைத்தால் எனது அண்ணன் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி மலரும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தம்பி பிரஹலாத் மோடி கூறியுள்ளார்.
பிரஹலாத் மோடி, அகில இந்திய மண்ணெண்ணெய் வியாபாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர் கன்னியாகுமரி வந்திருந்தார். அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் விவேகானந்தர் கேந்திரத்திற்குச் சென்று அங்கு விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றுக் கண்காட்சியைப் பார்வையிட்டார் பிரஹலாத்.
பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிட்டார். பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனது அண்ணன் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற்று முதல்வர் ஆகியுள்ளது உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் நல்லாட்சி நடத்தியதால் அவருக்கு மீண்டும் மக்கள் வாய்ப்பு வழங்கி உள்ளனர். இந்த முறையும் அவர் நல்லாட்சி நடத்துவார். இந்திய மக்கள் நினைத்தால் நமது நாட்டின் பிரதமராக அவர் வருவார் என்றார்.












Click it and Unblock the Notifications