For Daily Alerts
Just In
திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பஸ் புகுந்ததில் 2 பேர் பலி
திருச்சி: சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் அரசு விரைவுப் பேருந்து பாய்ந்ததில் ஒரு ஆண், ஒரு பெண் பலியாகினர்.
பெரம்பலூர் மாவட்டம் சித்தனியில் இருந்து 175 பேர் சேர்ந்து சமயபுரம் கோவிலுக்கு பாத யாத்திரை கிளம்பினர். அவர்கள் சிறுகனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து அவர்கள் கூட்டத்தில் பாய்ந்தது. இதில் சுமதி, ராஜா ஆகிய இருவர் பலியாகினர்.
மேலும் தங்கமணி என்ற பெண் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments
English summary
2 devotees died on the way to Samayapuram temple when a TNSTC bus hit them near Trichy. 175 devotees from Perambalur district were going to Samyapuram temple by foot.
Story first published: Friday, February 1, 2013, 13:05 [IST]