6 பேருக்கு வேட்டி சேலை, 6 பேருக்கு உதை கொடுத்த விஜய்காந்த்: சட்டசபையில் நத்தம் விஸ்வநாதன் கிண்டல்
சட்டசபையில் தேமுதிகவின் பார்த்திபன் பேசுகையில், டெல்டா விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம், எதிர்பார்த்தோம். ஆளுனர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
இதற்கு நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், டெல்டா விவசாயிகளைப் பற்றி உங்களைவிட அதிகம் கவலைப்படுபவர் முதல்வர் உரிய நேரத்தில், உரிய நிவாரணம் விரைவில் அறிவிப்பார் என்றார்.
ஆனாலும் பார்த்திபன் விடுவதாக இல்லை. " எங்கள் தலைவர் திரைப்படங்கள் மூலம் சம்பாதித்த பணத்தை வாரி வழங்கும் வள்ளலாக உயிர் இழந்த டெல்டா விவசாயிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆமாம். தானே புயலில் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு வேட்டி வழங்கினார். 6 பேருக்கு சேலை வழங்கினார். 6 பேருக்கு உதை கொடுத்தார் என்று கிண்டலடித்தார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திரைப்படங்களில் கோடி கோடியாக சம்பாதித்ததை வழங்குவதாக கூறுகிறார். ஆனால் சென்னை, மதுரையில் பொறியியல் கல்லூரிகளும், புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரியும் ஆரம்பித்தாரே தவிர விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றார்.
இதற்கு தேமுதிகவின் சந்திரகுமார், மதுரை, புதுச்சேரியில் கேப்டன் கல்லூரி ஆரம்பித்ததாக கூறுகிறார். இதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாரா? எனக் கேட்க, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ, அவர் சொன்ன இடத்தில் இல்லை என்றால், இருக்கிற இடத்தில் சொன்னதுபோல் வைத்துக்கொள்ளுங்கள் என்று நக்கலடித்தா.