வெங்கையா திருச்சி போன விமானத்தில் கோளாறு.. சென்னையில் தரையிறக்கினர்
சென்னை: பாஜக மூத்த தலைவர்களான வெங்கையா நாயுடு, லலிதா குமாரமங்கலம் ஆகியோர் பயணம் செய்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் அவசரம் அவசரமாக சென்னையில் தரையிறக்கப்ட்டது. இதனால் விமானத்தில் இருந்த 48 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாயுடு உள்ளிட்டோர் இன்று காலை சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் திருச்சிக்குப் பயணித்தனர். விமானத்தில் மொத்தம் 48 பேர் இருந்தனர்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சென்னைக்கே விமானத்தைத் திருப்பினார் விமானி. மேலும் விமான நிலைய்க கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் முன்னேற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன. பின்னர் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. வேரு பிரச்சினை ஏதும் ஏற்படவில்லை.
அதன் பின்னர் வெங்கையா உள்ளிட்டோர் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவர் என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications