பாக். கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்காக மனைவியை நிர்வாணமாக்கிய பஞ்சாயத்து
லாகூர்: பாகிஸ்தானில் கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்கு அவரது மனைவியை ஊர் மக்கள் முன்பு நிர்வாணப்படுத்தி பஞ்சாயத்து தண்டனை அளித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா குஜராத்தைச் சேர்ந்தவர் கல்சூம் மாய். அவரது கணவர் முகமது நவாஸ். நவாஸ் தனது மனைவியின் உறவினர் முகமது பிலாலின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். ஒரு நாள் கள்ளக்காதல் ஜோடி கையும், களவுமாக சிக்கியது.
இதையடுத்து நவாஸுக்கு தண்டனை கொடுக்க அவரது மனைவியை ஊர் மக்கள் முன்பு நிர்வாணப்படுத்த வேண்டும் என்று உள்ளூர் பஞ்சாயத்து உத்தரவிட்டது. கல்சூம் மாய் பஞ்சாயத்துக்கு வரவழைகக்ப்பட்டார். பஞ்சாயத்து உத்தரவுப்படி பிலால் மற்றும் சிலர் சேர்ந்து கல்சூமை கொடுமைப்படுத்தி ஊர் மக்கள் முன்பு நிர்வாணப்படுத்தினர்.
பிலால் குடும்பத்தினர் நவாஸை அடித்து நொறுக்கினர். இதையடுத்து கல்சூம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கஸ்பா குஜராத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பிலாலின் மனைவியை அசிங்கப்படுத்தியதற்காக நவாஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.