நான் மன்னிப்பு கேட்டேன், அதைக் கேட்டு பெண் செய்தியாளர் சிரித்தார் - வயலார் ரவி

வயலார் ரவி திருவனந்தபுரம் வந்தபோது அங்கு அவரை செய்தியாளர்கள் சந்தித்து, பி.ஜே.குரியன் விவகாரம் குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்டனர். ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த வயலார் ரவி, பெண் செய்தியாளரைப் பார்த்து கோபமாக பேசினார். அவரது பேச்சு ஆபாசமாக இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து வயலார் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேரள பத்திரிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்டார் வயலார் ரவி. ஆனால் அதைக் கேட்டு அந்த செய்தியாளர் தன்னைப் பார்த்து சிரித்ததாக தற்போது ரவி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் கூறுகையில், நான் அந்த செய்தியாளரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்ட அவர் வாய் விட்டுச் சிரித்தார். நான் என்ன பண்ணுவது என்றார் ரவி.
ஆனால் அந்த பெண் நிருபர் அப்படி சிரிக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தான் மன்னிப்பு கேட்டதும் அப்பெண் செய்தியாளர் சிரித்ததாக அடித்துக் கூறியுள்ளார் ரவி.
இது வேற புது சர்ச்சையா...












Click it and Unblock the Notifications