For Daily Alerts
Just In
நல்லவர்கள் அரசியலில் நுழையமுடியாது: முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்த வி.கே சிங் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணம் தனக்கு துளிகூட கிடையாது என்றார்.
இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையை பார்க்கும் போது நல்லவர்கள் அரசியலில் நுழைய முடியாது. நுழையவும் விடமாட்டார்கள்.
42 ஆண்டுகள் நாட்டிற்காக சேவை செய்யும் பொறுப்பு கிடைத்ததை எண்ணி பெருமை படுகிறேன். அதனால் அரசியலில் ஈடுபடமாட்டேன். எனினும் நல்லவர்கள் அரசியலில் ஈடபட வேண்டும் என்பதனை நாடு முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்வேன் என்றார்.
Comments
English summary
Former Army Chief Gen V K Singh has shown disinterest in joining politics as he feels that the present system is such that good people may not enter it.
Story first published: Sunday, February 17, 2013, 14:35 [IST]