விவிஐபிகளுக்கான ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல்... இத்தாலி விரைகிறது சிபிஐ குழு

இந்தக் குழுவினர் மிலன் நகருக்குச் செல்கிறார்கள். அங்கு கைமாறிய பணம் மற்றும் ஊழல் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையை மேற்கொள்கிறார்கள். பல்வேறு தகவல்களையும் திரட்டவுள்ளனர். நாளை இக்குழு இத்தாலி செல்கிறது.
விவிஐபிகளுக்காக ரூ 3600 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டர் ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு ரூ 362 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
மத்திய அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம். இதுகுறித்து தற்போது நேரடியாக இத்தாலிக்கு சென்று விசாரணை நடத்தவுள்ளது சிபிஐ.
இத்தாலிய விசாரணை அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் குழு சந்தித்து தகவல் சேகரிக்கவுள்ளது. யாருக்கு லஞ்சம் தரப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications