இலவச பொருள் வழங்க கோரி அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இலவசப் பொருட்கள் வழங்கக் கோரி அமைச்சர் செந்தூர்பாண்டியனை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் தமிழக அரசின் இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து 200க்கும் மேற்பட்டோருக்கு கிரைண்டர் மின் விசிறி, மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, அதி்முகவினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விழா முடிவடைந்து அமைச்சர் செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் திடீரென அமைச்சரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் பகுதியில் 598 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் 290 பேருக்கு மட்டுமே பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் முறையிட்டனர்.

இதையடுத்து அமைச்சர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். விடுபட்ட அனைவருக்கும் விரைவில் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+