துப்பாக்கிச்சூட்டில் பலியான ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருது: ஒபாமா வழங்கினார்

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள சாண்டி ஹுக் மழலையர் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள், 6 ஆசிரியைகள் உள்பட 26 பேர் பலியாகினர்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 ஆசிரியைகளின் பெயர்கள் அமெரிக்காவின் 2-வது உயரிய விருதான ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் பலியான ஆசிரியர்களின் குடும்பத்தாரிடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இவ்விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் ஒபாமா,"பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் பலியான ஆசிரியைகள் நினைத்திருந்தால், தங்களது உயிரை தற்காத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், அவர்கள் தன்னலத்தை பெரிதாக கருதவில்லை. தங்களது பாதுகாப்பில் இருந்த குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை பாதுகாப்பதற்காக தங்களது உயிர்களை அவர்கள் இழந்தனர்" இவ்வாறு ஒபாமா பேசினார்.
உலக நாடுகளை உலுக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பின்னர் துப்பாக்கி உரிமம் தொடர்பான சட்டங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்க அரசு ஆலோசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications