கெஜட்டில் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு: கர்நாடகத்தில் போராட்டம்- மைசூர், மாண்டியாவில் 144 தடை உத்தரவு
Subscribe to Oneindia Tamil

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு இன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் எரிக்கப்பட்டது.
மைசூரில் கர்நாடகா ரக்ஷனா வேதிகே அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் மாண்டியா மாவட்டத்திலும் கண்டனப் போராட்டம் நடந்தது. இதையடுத்து மைசூர், மாண்டியா மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதாவது நடக்காமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டதைக் கண்டித்து கர்நாடகா ரக்ஷனா வேதிகே அமைப்பினர் பெங்களூர் மற்றும் மைசூரில் இன்று ரயில் மறியல் போராட்டமும் நடத்தினர்.












Click it and Unblock the Notifications