மத்திய அரசு இனியாவது இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இருக்கட்டும்: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொத்துக் குண்டுகள் வீசி கொல்லப்படனர் என்றும், உயிருடன் பிடிபட்டவர்கள் கடும் சித்திரவதை செய்யப்பட்டனர் என்றும் உலக நாடுகள் சொன்னபோது, இலங்கை அரசு மறுத்தது.
ஆனால் இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இலங்கை மண்ணில் பிறந்த சிறுவனை அந்நாட்டு அரசே கொடூரமாக படுகொலை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்திய அரசு எப்போதும் போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இனியாவது இருக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications