ஜெயலலிதா பிறந்தநாளில் வருவாய்த் துறை அறிமுகப்படுத்தும் "அம்மா"
சென்னை: பட்டா மாற்ற, இலவச வீட்டு மனை பட்டா பெற, உழவர் பாதுகாப்பு அட்டை பெற, பிறப்பு, இறப்பு, சாதிச் சான்றிதழ் பெற இனி நீங்கள் அலைய வேண்டாம் வருவாய்த் துறை அலுவலர்களே உங்கள் வீடு தேடி வந்து அளிப்பார்கள். அம்மா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
பட்டா மாற்ற, இலவச வீட்டு மனை பட்டா பெற, உழவர் பாதுகாப்பு அட்டை பெற, பிறப்பு, இறப்பு, சாதிச் சான்றிதழ் பெற மக்கள் நடையாக நடக்க வேண்டும். ஆனால் மக்கள் இனி அலைச்சல் இன்று சான்றிதழ்கள் பெற அம்மா (AMMA (Assured Maximum Service to Marginal People in All Villages) என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாளையொட்டி இந்த புதிய திட்டத்தை இன்று துவங்குவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வின்னப்பள்ளி கிராமத்தில் இத்திட்டத்தை வருவாய்த் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் இன்று துவங்கி வைத்தார்.

இது தவிர குடும்ப அட்டை, நிலப் பிரச்சனைகள், குடிநீர் பிரச்சனைகள் குறித்தும் ஆய்வு செய்து உடனடி தீர்வு காணப்படும் என்று வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications