கோழி, நாய் ரத்தம் குடித்த பெண்ணுக்கு டிசோசியேஷன் நோய்: கோவை மருத்துவர்கள்
கோவை: நாய், கோழிகளைக் கொன்று ரத்தம் குடித்த பெண் "டிசோசியேஷன்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மணியக்காரம் பாளையம் அன்பு நகரில் வசித்து வரும் சங்கர் தனது மனைவி இரவு நேரத்தில் பச்சை ரத்தம் குடிப்பதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த பெண் டிசோசியன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உள்மனதில் பிரச்னையை அடக்கி வைத்திருந்தால் இந்த பாதிப்பு இருக்கும். கணவரின் கொடூர செயல், குடித்துவிட்டு வந்து அடிப்பது போன்ற பிரச்னைகளை வெளியே சொல்லாமல் உள்மனதில் வைத்து கொண்டால் பயங்கர கோபம் வெளிப்படும்.
இதையும் டிசோசியேஷன் என்பார்கள். இந்த பாதிப்பு இருந்தால் தூக்கமின்மை, தனக்கு தானே சிரிப்பது, காதில் யாராவது பேசுவது போல் தோன்றும். குடும்பத்தில் யாருக்காவது இந் நோய் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து கணவரிடம் விசாரிக்க வேண்டும். அதன்பிறகு தான் சிகிச்சை அளிக்க முடியும். டிசோசியேஷனை கிராமங்களில் ரத்தக் காட்டேரி, பேய் ஆட்டம் என்பார்கள் என்று விளக்கம் கூறினார் மருத்துவர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர் தனது மனைவி பிரபா இரு குழந்தைகளுடன் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கோவை வந்தனர்.
மணியகாரம்பாளையம் அருகே அன்பு நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பிரபா கடந்த சில நாட்களாக விரக்தியான மனநிலையில் இருந்ததாக தெரிகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தும், கழுத்தை நெரித்தும் கொல்ல முயன்றுள்ளார். கடந்த சனிக்கிழமை தெருவில் சென்ற ஒரு நாயை பிடித்து கொன்று ரத்தத்தை குடித்துள்ளார் பிரபா.
பயந்துபோன சங்கர், அவரை பொள்ளாச்சியில் வைத்தியரிடம் அழைத்து சென்றார். அங்கும் திடீரென ஆவேசம் அடைந்த பிரபா, ரோட்டில் சென்ற நாயை பிடித்து கொன்று ரத்தத்தை குடித்துள்ளார். தொடர்ந்து 7 கோழிகளை கொன்று ரத்தம் குடித்துள்ளார்.
பெண் ரத்தம் குடிக்கும் தகவல் பரவியதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பிரபாவை மீண்டும் கோவைக்கு அழைத்து வந்த ராம், அவரை ஜி.ஹெச்.சில் சேர்த்தார். அங்கு மனநல காப்பக வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.