Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

Balakrishnan, Venkatesan lawyer and Mani maheswaran
நெல்லை: மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தென் மாவட்ட மக்களுக்கு பயன்தரக்கூடிய புதிய ரயில்களோ, திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை என்று வர்த்தகர்களும், நுகர்வோர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தென் மாவட்டங்கள் தொடர்ந்து ரயில்வேயால் புறக்கணிக்க பட்டு வருகிறது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பாஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓராண்டு ஆகியும் இயக்கப்படாததால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தென்னக ரயில்வேயில் அதிக வருமானத்தை அள்ளி கொடுக்கும் மாவட்டங்கள் பட்டியலில் தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை,விருதுநகர்,தூத்துக்குடி,கன்னியாகுமரி,ஆகிய 4 தென்மாவட்டங்கள் தான்.

சிதம்பரம், வாசன் மாவட்டங்கள்

மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்த்த எந்த அறிவிப்புக்களும் தென் மாவட்டத்திற்கு அறவே இல்லை, மாறாக மத்திய அரசில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் சிதம்பரம்,வாசன் ஆகியோரின் தொகுதிகளை மையம் வைத்து புதிய ரயில்கள் அறிவிக்க பட்டுள்ளதாக மாநில நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் கே.மணி.

பாசஞ்சர் ரயில் தேவை

நெல்லை - செங்கோட்டை வழித்தடத்தில் தற்போது 2 முறை அப், 2 முறை டவுன் முறையில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் இந்த வழித்தடத்தில் 4 முறை அப், டவுன் முறையில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி தற்போது இயக்கப்படும் 2 முறைகள் தவிர காலை 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு செங்கோட்டை செல்லும் வகையிலும், அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மதியம் 1.15 மணிக்கு வரும்படியும் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன்.

இதேபோல் நெல்லையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு செங்கோட்டை செல்லும்படியும், செங்கோட்டையில் 6 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 8.15 மணிக்கு வரும்படியும் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட வேண்டும்.

மாணவர்கள், வர்த்தகர்கள் பாதிப்பு

பட்ஜெட்டில் அறிவித்தபடி கூடுதலாக 2 முறைகள் பாசஞ்சர் இயக்கப்படாததால் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் இருந்து தினமும் நெல்லைக்கு வந்து செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அவதிப்படுகின்றனர் என்கிறார் பாலகிருஷ்ணன்.

அறிவிக்கப்பட்ட ரயில்கள் காணோம்

கன்னியாகுமரி - நிஜாமுதீன் வாராந்திர எக்ஸ்பிரஸ் இனிமேல் வாரம் 2 முறைகள் இயக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும் வாரம் 2 முறை இந்த ரயில் இயக்கப்படவில்லை.

நெல்லையில் இருந்து கோயம்புத்தூர், கொங்கன் ரயில்வே வழியே இயக்கப்படும் தாதர் எக்ஸ்பிரஸ் குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஒரு மாதம் மட்டும் இந்த ரயில் இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் இயக்கப்பட்டால் மும்பைக்கு பயண நேரம் குறையும் என கூறப்படுகிறது. மும்பையில் வசிக்கும் நெல்லை மக்களுக்கு இந்த ரயில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறார் வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன்.

அவசரகோல அறிவிப்பு

செங்கோட்டையில் இருந்து ஈரோடு,சென்னைக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு வருமென்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.லல்லு பிரசாத் யாதவ் அமைச்சராக இருக்கும் போது அப்போதைய பட்ஜெட்டில் செங்கோட்டை-கோவை பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார்.அனால் அந்த அறிவிப்பும் இதுவரை அமல் படுத்த வில்லை.அவசரக் கோலத்தில் அறிவிக்கும் ரயில்வே அதனை முறையாக செயல் படுத்த முடியாமல் திணறிவருகிறது.

தமிழக எம்.பிக்கள் கேட்பார்களா?

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி புதிய ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்தை அழுத்தமாக வலியுறுத்தி காரியத்தை சாதிக்க தென் மாவட்ட எம்.பி.க்கள்எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் மக்கள் மத்தியில் குமுறல்கள் வருகிறது . எதற்கெல்லாமோ போராடும் கட்சிகள், அமைப்புகளும் இதில் கவனம் செலுத்தவில்லை. அறிவிக்கப்பட்டபடி ரயில்கள் இயக்கப்படாமல் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் நிலைதான் அதோ கதியாக உள்ளது. இதனால் ரயில்வே துறை மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏமாற்றம் தந்த பட்ஜெட்

நாகர்கோவில் - பெங்களூரூ வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குவது, திருச்சி - நெல்லை இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பது, திருவனந்தபுரம் - மங்களூரூ இரவு நேர ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பது,செங்கோட்டை-சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் ,நெல்லையை மையமாக வைத்து தனி ரயில்வே கோட்டம் அமைக்கவேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே நெல்லை,தென்காசி,விருதுநகர்,நாகர்கோவில்,தூத்துக்குடி, ஆகிய 5 மக்களவை எம்.பி தொகுதியில் வசிக்கும் மக்கள் ஏமாற்றத்தை அள்ளி வழங்கியவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முடிவில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+