கேரளாவில் 15 வயது மாணவியை கொலை செய்த 2 பேருக்கு தூக்கு

Subscribe to Oneindia Tamil

வயநாடு: கேரளாவில் 15 வயது சிறுமியை நகைக்காக கொலை செய்த இரண்டு பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது

கேரள மாநிலம் வயநாடு கல்பட்டாவை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று மாணவி அனிதா பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த நாகர், கபீர் என்ற 2 வாலிபர்கள் மாணவி அனிதாவை கடத்தி சென்று கொலை செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் கல்பட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கல்பட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், நாசர், கபீர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இக்கொலை வழக்கில் 2 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. புதன்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 பேரும் செய்த தவறு மிகவும் கொடூரமானது. நகைக்காக இளம்பெண்ணை கொலை செய்தது மன்னிக்க முடியாத ஒன்று. இவர்களால் இந்த நாட்டிற்கு ஆபத்து இதனால் 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கிறேன் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இவ்வழக்கின் தீர்ப்பு என்பதால் எராளமான போலீசார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+