டெல்லியில் 5 வயது சிறுமியை கற்பழித்த இருவர் தலைமறைவு
டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியை இரண்டு மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று மதியம் கிழக்கு டெல்லியில் உள்ள நியூ சீமபுரி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போய் மறைவான பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்குப் பின்னர் அந்தப் பக்கமாக சென்ற சிலர் சிறுமியைச் சுற்றி ரத்தமாக இருந்ததைப் பார்த்து அச்சமடைந்த சிலர் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியை சீரழித்த கயவர்களை தேடிவருகின்றனர்.