லோக்சபாவில் விவாதத்துக்கு மத்தியில் ஹாயாக பேப்பர் படித்த அமைச்சர்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபாவில் நேற்று சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அமைச்சர் ஒருவர் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்தார் அவையை நடத்திக் கொண்டிருந்த தற்காலிக தலைவர்.
நேற்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது அமைச்சர் பபன்சிங் கடோவர் என்பவர் ஹாயாக செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். இதை சபையை நடத்திக் கொண்டிருந்த தற்காலிக தலைவர் இந்தர்சிங் நாம்தாரி அதைப் பார்த்து விட்டார்.
அமைச்சரே, இப்படியெல்லாம் சபையில் செய்தித்தாள் படிக்கக் கூடாது என்று கண்டிப்பான குரலில் கூறவே பேப்பரை கீழே வைத்து விட்டார் கடோவர்.
ஒருவேளை மக்களவை செய்தி குறித்துப் பார்த்துக் கொண்டிருந்திருப்பாரோ...?












Click it and Unblock the Notifications