விஜயகாந்த் கோர்ட்டுக்கு வந்த நேரம் பார்த்து கத்தி சிக்கியதால் பரபரப்பு

முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக பல்வேறு ஊர் கோர்ட்டுகளில் விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த அடிப்படையில், திண்டுக்கல் கோர்ட்டிலும் ஒரு வழக்குப் போடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 2 வாய்தா வாங்கப்பட்டுள்ளது. 3வது வாய்தா இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நேரில் ஆஜராவாதற்காக விஜயகாந்த் கோர்ட்டுக்கு வந்தார். காலை 11 மணியளவில் நீதிபதி பாலசுந்தரம் குமார் முன்னிலையில் அவர் ஆஜரானார். பின்னர் வழக்கு விசாரணை மார்ச் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இதே கோர்ட் வளாகத்தில் உள்ள இன்னொரு நீதிமன்றப் பகுதியில் நீளமான கத்தி ஒன்று கிடந்ததைப் பார்த்து போலீஸார் அதி்ர்ச்சி அடைந்தனர். உடனடியாக கத்தி கைப்பற்றப்பட்டது. அது யாருயைட கத்தி, எதற்காக கத்தியுடன் வந்தனர் என்பது தெரியவில்லை.
கோர்ட் வளாகத்தி்ல் கத்தி கிடந்த தகவல் பரவியதும் விஜயகாந்த்தைப் பார்க்க கூடியிருந்த தேமுதிகவினர் உஷாராக காணப்பட்டனர். போலீஸாரும் விஜயகாந்த்துக்கு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.












Click it and Unblock the Notifications