மருத்துவ கல்லூரிகளில் கோடிக்கணக்கில் வசூல்: சிபிஐ 'வலைவீச்சு'.. அமைச்சர் விஜய் பதவி போனது ஏன்?

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விஜய்யின் வசூல் வேட்டை குறித்து செய்தி வெளியானதை அடுத்தே அவரது பதவி பறிபோனது என்று கூறப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த டாக்டர் விஜய் சுகாதாரத் துறை அமைச்சராகவும், வேலூர் மாநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் கட்சி பொறுப்பில் இருந்தும் விடுவித்து உத்தரவிட்டார்.
விஜய்யின் பதவி திடீர் என்று பறிபோனதற்கான காரணம் என்ன என்று தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழக பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜய்யின் பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
இந்த விவகாரத்தில் விரைவில் விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும் கூறப்படுகிது.
மேலும் வேலூர் மாவட்ட மகளிரணியைச் சேர்ந்த ஒரு பெண்ணை விஜய்யின் ஆதரவாளரான ஒரு அதிமுக நிர்வாகி தாக்கி, சேலையைக் கிழித்து அராஜகம் செய்த விவகாரமும் வெளியானது. அந்த நபருக்கு விஜய் தொடர்ந்து ஆதரவாக இருந்த நிலையில் அவர் மீதும் பெண் மீதும் வழக்குகள் பாய்ந்தன. இந்த விவகாரத்தில் கட்சியின் பெயர் நாறியது.
இதையடுத்து டாக்டர் விஜய்யின் அமைச்சர் பதவி பறிபோய் உள்ளது.












Click it and Unblock the Notifications