தங்கத்தில் முதலீடு செய்வதை குறைக்க புதிய சேமிப்புத் திட்டங்கள் அறிவிப்பு

இது தொடர்பாக பட்ஜெட் உரையில் அவர் கூறியிருப்பதாவது:
பொதுமக்கள் பெருமளவு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யும்போது பணப்புழக்கம் குறைந்துவிடுகிறது. இதற்காக ராஜீவ் காந்தி பங்கு பத்திர சேமிப்புத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். பங்கு பத்திரங்கள், கடன் பத்திரங்கள், சேமிப்புப் பத்திரங்கள், பட்டியலிடப்பட்ட பங்குகள், பரஸ்பர நிதி பத்திரங்கள் ஆகியவற்றில் செய்யப்படும் முதலீடு நாட்டில் பல தொழிற்சாலைகளை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.
2013 ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2014 மார்ச் 31-ந் தேதி வரை முதல் முறையாக ரூ.25 லட்சத்துக்கு குறைவான மதிப்பில் வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும். இது அதிக எண்ணிக்கையிலானோர் வீடுகளை வாங்க உதவும். இதனால் இரும்பு, சிமென்ட், செங்கல் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அதிகரித்து கட்டுமானத் தொழில் பெரும் வளர்ச்சியடைவதோடு ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications