அட்லாண்டிக் கடல் மீது பறந்து கொண்டிருந்த விமானம்: தூக்கம் போட்ட விமானி!

இந்த சம்பவம் நடந்தது 2011ம் ஆண்டில் தான் என்றாலும் அது இத்தனை காலம் மூடி மறைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இப்போது இந்த விவரம் வெளியே வந்துள்ளது.
இதை நியூசிலாந்து போக்குவரத்து அமைச்சர் ஜெர்ரி பிரவுன்லீயும் உறுதி செய்துள்ளார்.
போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்தை இரு விமானிகள் இயக்கிக் கொண்டிருந்தபோது, ஒரு விமானி தூங்கிவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின் விழித்த அவர் மீண்டும் தூங்கிவிட்டார். இது நடந்தபோது அந்த விமானம் அட்லாண்டிக் கடலின் மீது பறந்து கொண்டிருந்தது.
இன்னொரு பைலட் அவரை எழுப்ப முயன்றதோடு விமானத்தையும் பிரச்சனையில்லாமல் தொடர்ந்து இயக்கியுள்ளார்.
லண்டனில் இருந்து கிளம்பிய அந்த விமானத்தை இயக்கியபோது தனக்கு மிகவும் சோர்வாக இருந்ததாகவும், லண்டனில் முதல் நாள் சரியாக தூங்காததே அதற்குக் காரணம் என்றும் அந்த பைலட் தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.
லண்டனில் இந்த பைலட் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ஏசியில் பிரச்சனை இருந்ததாகவும், இதனால் இரவு 3 முறை அறைகளை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதால், தூக்கம் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விளக்கத்தை அந்த பைலட் தானாகவே முன் வந்து அளித்துவிட்டதால், அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாது என்று ஏர் நியூசிலாந்து அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications