படம் பார்க்க வந்த மாணவி விஷம் குடித்தார்... காதலன் எஸ்கேப்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் காதலனுடன் படம் பார்த்த கல்லூரி மாணவி, இடைவேளையின்போது விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கொத்தமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் மகள் ஜானகி. தனியார் பாலிடெக்னிக்கில் 3வது ஆண்டு சிவில் என்ஜீனியரிங் படித்து வந்தார்.
அதே கல்லூரியில் படித்து வந்த சங்கர் என்பவருடன் ஜானகிக்கு காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்தனர். இந்த நிலையில் இருவரும் கடந்த 22ம் தேதி தியேட்டருக்குப்படம் பார்க்கப் போனார்கள்.
படத்தின் இடைவேளையின்போது ஜானகி தன்னுடன் கொண்டு வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்து விடடார். இதைப்பார்த்து அதிர்ந்த சங்கர் அலறினார். உடனடியாக அவரும் மற்றவர்களும் சேர்ந்து ஜானகியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு ஜானகி சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்து விட்டார். தற்போது சங்கர் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார்தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications