சசி பெருமாளிடம் பேச்சு .. அதிகாரிகள் பிசியாக இருப்பதாக கூறினாரா அமைச்சர் விஸ்வநாதன்?

Subscribe to Oneindia Tamil

Natham Viswanathan
சென்னை: பூரண மது விலக்கு கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி, பெரியவர் சசி பெருமாளிடம் பேச முடியாத அளவுக்கு அதிகாரிகள் பிசியாக இருப்பதாகவும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த அதிகாரியையாவது தொடர்பு கொள்ள முடியுமா என்று கேட்டதாகவும், மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது சர்ச்சை கிளம்பியுள்ளது.

அமைச்சர் இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா என்றும் சசி பெருமாள் ஆதரவாளர்கள் ஆதங்கத்துடன் கேட்கின்றனர்.

சசி பெருமாள் 32-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. அடுத்தடுத்து அவர் ரத்த வாந்தி எடுத்து வருகிறார்.

இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், மின்துறை அமைச்சரும், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சருமான ஆர்.நத்தம் விசுவநாதனை சென்னை அடையாறு கீரின்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது சசி பெருமாளின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு அமைச்சர் நத்தம் விசுவநாதன் நான் ஏற்கனவே அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த செல்லுமாறு கூறி இருக்கிறேன். ஆனால் அவர்கள் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை என்று தெரிகிறது.

பொதுவாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளை தொடர்பு கொள்வது என்பது சிரமம். தற்போது தமிழ்நாடு முழுவதும் மது விலக்கிற்காக ஏராளமான பேர் போராடி வருகிறார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடியுமா?.

தற்போது யாரெல்லாம் சசி பெருமாளை தூண்டிவிடுகின்றனர் என்று எங்களுக்கு தெரியும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதாக அவரை சந்திக்க சென்ற குழுவினர் தெரிவித்தனர்.

அமைச்சரின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் அவரது ஆதரவாளர்கள் கவலையுடன் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+