6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் முதன்மை உள்ளுறை அதிகாரியாக பணியாற்றி வந்த ஆனந்த் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு அரசின் அகதிகள் மறுவாழ்வு துறையின் முதன்மை செயலாளர் மற்றும் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா ஐ.ஏ.எஸ். மேலாண்மை பயிற்சி நிலையத்தின் மேலாண் இயக்குநராக பணி புரிந்து வந்த பழனிகுமார் பொதுத் துறையில் கூடுதல் அரசு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளராக பணிபுரிந்து வந்த பி.அண்ணாமலை ஐ.ஏ.எஸ். நகர்புற நில சீர்திருத்தம் மற்றும் நகர்புற நில வரி திட்ட துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஆணையராக பணிபுரிந்து வந்த டி.கே.பொன்னுசாமி பொருளாதார புள்ளியியல் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகவரித்துறையின் இணை ஆணையராக பணிபுரிந்து வந்த ராஜேந்திர ரத்னு ஐ.ஏ.எஸ்.தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் பொதுத்துறையின் இணை செயலாளராக பணி புரிந்து வந்த மைதிலி ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.