இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி 12ம் தேதி தமிழகத்தில் பந்த்: டெசோ அழைப்பு

Subscribe to Oneindia Tamil

Sri Lankan issue: TESO calls for a strike on march 12
சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 12ம் தேதி பொது வேலைநிறுத்தத்திற்கு டெசோ அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், துணைப் பொது செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், வழக்கிறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் மற்றும் இனப்படுகொலையை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 12ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடத்தப்படும். இது கட்சி சார்பற்ற வேலைநிறுத்தம் ஆகும். இதற்கு தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், வியாபார நிறுவனங்கள், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் என்று அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி தீக்குளித்து இறந்த கடலூர் மணிக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+