காலிங் பெல் அடித்து லாரி டிரைவர் மனைவியிடம் கண்டபடி பேசிய வாலிபர்... போலீஸில் ஒப்படைப்பு
சென்னை: வீட்டில் தனியாக இருந்த லாரி டிரைவர் மனைவியிடம், காலிங் பெல் அடித்து கதவைத் திறக்க செய்து ஆபாசமாக பேசி அழைத்த நபரை போலீஸார் பிடித்தனர்.
சென்னை, நெற்குன்றம் ஸ்ரீலட்சுமி நகர் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவர். இவரது மனைவி ராஜலட்சுமி (36).
2 நாட்களுக்கு முன்பு பிரபாகரன் வேலைக்குப் போய் விட்டார். ராஜலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காலிங் பெல் அடித்தது. இதையடுத்து ராஜலட்சுமி கதவைத் திறந்தார். வெளியே ஒரு வாலிபர் நின்றிருந்தார்.
அவரிடம் என்ன வேண்டும் என்று ராஜலட்சுமி கேட்க, அதற்கு அந்த நபர் ராஜலட்சுமியிடம் ஆபாசமாகப் பேசினார். மேலும் தன்னுடன் வருமாறும் அழைத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் ராஜலட்சுமி. உடனே உதவி கோரி அவர் குரல் எழுப்பினார்.
அந்த நேரம் பார்த்து அந்தப் பக்கமாக ரோந்து வந்து கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் பீமராஜ் விரைந்து வந்து ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்தார். காவல் நிலையம் கொண்டு போய் அவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் நாராயணன் என்றும், கிண்டி அம்பாள் நகரில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
ராஜலட்சுமியிடம் ஏன் அவர் கதவைத் தட்டி வம்பு செய்தார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications