அடுத்த பிரதமர் யார்?: மோடிக்கு 43 சதவீதம் பேர் ஆதரவு, பின்தங்கும் ராகுல்

பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வரும் நிலையில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தனக்கு பிரதமராகும் ஆசை இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்று இப்சாஸ் என்ற நிறுவனம் மக்களிடையே ஆய்வு நடத்தியது. ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
அதில், லக்னோ, பெங்களூர் மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கொல்கத்தா, டெல்லி மற்றும் மும்பையில் உள்ளவர்கள் மோடிக்கு எதிராக உள்ளனர். முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 43 சதவீதம் பேர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடிக்கு பெண்களை விட ஆண்களே அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பின்தங்கியுள்ளார். அவருக்கு ஆண்களைவிட பெண்கள் தான் அதிகம் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராகுலுக்கு பெங்களூர் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும் கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் டெல்லி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications