தைவானில் நிலநடுக்கம்: 5.6 ரிக்டர் அளவாக பதிவு
தைபே: தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தலைநகரம் தைபே யில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சத்துடன் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.
ஹூவாலியன் நகரின் கிழக்கு கடற்கரை பகுதியில் பூமிக்கு அடியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டெர் அளவாக இருந்தது என்று பூகம்பவியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தினால் தைபேயில் கட்டிடங்கள் திடீரென்று குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்று தைவான் நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தைவான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியாகும். கடந்த 1999 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டநிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர். 50,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications