அணு உலையை மூடக்கோரி 4 இடங்களில் நாளை முற்றுகை - 4000 போலீஸ் குவிப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் ஏற்பட்ட கசிவு குறித்தும், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் முன்னுக்கு பின் முரணான அறிக்கையால் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்தும் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று போராட்டக்குழு கோரி வருகிறது. ஆனால் இதுவரை அரசு வெள்ளை அறிக்கை குறித்து பதில் இல்லை.
இதனை கண்டித்து தூத்துக்குடி துறைமுகம், கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், விவேகானந்தர் பாறை மற்றும் கூடங்குளம் அணு உலை ஆகிய 4 இடங்களில் கடந்த பிப் 15ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இதில் தூத்துக்குடி துறைமுகம் மற்றும் கூடங்குளம் அணு உலையை கடல் வழியாகவும், தரை வழியாகவும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி வங்க கடலில் ஏற்பட்ட சூறைகாற்றால் படகுகள் பழுதானதால் இந்த போராட்டம் பிப் 27ம் தேதி ஓத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்ததால் பிப் 27ம் தேதி நடைபெற இருந்த போராட்டமும் ஓத்தி வைக்கப்பட்டது. பின்னர் இந்த முற்றுகை போராட்டம் மார்ச் 11ம் தேதி நடக்கும் என்று போராட்டகுழு ஓருங்கிணைப்பாளர் அறிவித்திருந்தார்.
இதையொட்டி நாளை 4 இடங்களில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இதனால் இந்த 4 பகுதிகளிலும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து ஏற்கனவே கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பணியில் இருந்த 1500 போலீசாரும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலிருந்து 2500 போலீசார் என மொத்தம் 4 ஆயிரம் போலீசார் நெல்லை சரக டிஐஜி சுமித் சரண் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications