டெசோ பந்த்: கடையடைப்பு செய்யச் சொல்லி வணிகர்களை வற்புறுத்தக் கூடாது- வெள்ளையன்
சென்னை: டெசோ அமைப்பின் வேலை நிறுத்த போராட்டத்தின்போது கடையடைப்பு செய்ய வணிகர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை கோரி மார்ச் 12ம் தேதி டெசோ சார்பில் பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து 2009ல் தமிழ்நாட்டில் முதல் கடையடைப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது எங்கள் பேரவை தான். அப்போது எங்களைக் கைது செய்து, எங்கள் போராட்டத்தை அப்போதிருந்த திமுக அரசு எப்படியெல்லாம் நசுக்க முயன்றது என்பதை நாடு அறியும்.
ஈழத்தில் நடந்து கொண்டிருந்த இனப்படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன், வருவாய் இழப்பைப் பொருட்படுத்தாமல் தமிழகமெங்கும் வணிகர்கள் கடையடைப்பு நடத்தி எங்கள் உணர்வை வெளிப்படுத்தினோம்.
ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டுமென ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை முழு மனதாக ஆதரிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதே மத்திய அரசில் அவரது கட்சி அமைச்சர்கள் இருப்பதும், அந்த மத்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழ்நாட்டில் அவர்களே போராட்டம் நடத்துவதும் வணிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் இந்த தீர்மானத்தை ஜெனிவாவில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருப்பதை நாங்கள் வழிமொழிகிறோம். டெசோ அமைப்பும் இந்தக் கருத்தை வழிமொழிய வேண்டும்.
மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அந்த அரசில் அங்கம் வகிக்கும் திமுகவுக்கு அரசியல் ரீதியான வழிகள் உள்ளன. அவற்றை விட்டுவிட்டு கடையடைப்பு செய்ய வேண்டும் என்று வணிகர்களைக் கட்டாயப்படுத்த கூடாது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications