மகளுக்குக் கல்யாணம், தயவு செஞ்சு யாரும் வந்துராதீக.. கெஞ்சிக் கேட்கும் வடிவேலு!
சென்னை: தனது மகள் திருமணம் தொடர்பாக அழைப்பிதழ் கொடுத்து வரும் வைகைப் புயல் வடிவேலு, திமுக பிரபலங்களிடம் மட்டும் ரகசியமாக, தயவு செய்து யாரும் கல்யாணத்துக்கு வர வேண்டாம். இருந்த இடத்திலிருந்தே ஆசிர்வாதம் கொடுத்தால் போதும் என்று கெஞ்சாத குறையாக கோரிக்கை விடுத்து வருகிறாராம்.
வடிவேலு நிலை இப்படியாகிருக்கக் கூடாதுதான்.ரொம்பக் கஷ்டமான சூழல்தான். மனதளவில் மிகவும் நொறுங்கிப் போயுள்ள வடிவேலுவை தற்போது ஆறுதல் படுத்துவது மகளின் திருமணம் மற்றும் கையில் கிடைத்துள்ள சில புதிய படங்கள் மட்டு்மே.
மூத்த மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்யவுள்ளார் வடிவேலு. அந்தப் பணிகளில் தற்போது படு தீவிரமாக இறங்கியுள்ளார்.

மதுரையில் கல்யாணம்
வடிவேலு மகளின் திருமணம் மதுரையில் ஏப்ரல் 4ம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறதாம்.

வடிவேலு மேற்பார்வையில்
மூத்த மகள் என்பதால் திருமண வேலைகளை வடிவேலுவே முன்னின்று கவனித்து பார்த்து பார்த்து செய்து வருகிறாராம்.

மதுரைக்கார மாப்பிள்ளை - ரசிகரும் கூட
வடிவேலு மகளைக் கரம் பிடிக்கப் போகும் மாப்பிள்ளையும் மதுரைக்காரர்தானாம். ஏரியா எது என்று தெரியவில்லை. வடிவேலுவின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பாராம். இப்போது வடிவேலுவே மாமனாராக வருவதால் செம ஹேப்பியாக இருக்கிறாராம்.

அண்ணே கல்யாணம், ஆனா வராதீக...!
திருமணத்திற்கு முக்கியப் புள்ளிகளுக்கு மட்டுமே நேரடியாக அழைப்பு கொடுக்கவுள்ளாராம் வடிவேலு. மற்றபடி மிகுந்த ஆடம்பரமாக இல்லாமல் திருமணம் நடைபெறுமாம். மேலும் திமுக பிரபலங்களிடம் மிகவும் தணிந்த குரலில் அண்ணே இருந்த இடத்திலிருந்தே ஆசிர்வதிச்சா போதும்ணே, தயவு செய்து மண்டபத்துக்கு வந்துராதீங்கண்ணே என்று கெஞ்சாத குறையாக கேட்டுக் கொண்டுள்ளாராம்.
ஆட்சியாளர்களின் கோபத்திற்கு அணுவளவும் ஆளாகி விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம்.












Click it and Unblock the Notifications