பிளஸ் 2, இயற்பியல் தேர்வில் விடைகளை எழுதிக் காட்டிய ஆசிரியர்கள் : தேர்வு மையம் மாற்றம்
நாமக்கல்: நாமக்கல், பொம்மைக்குட்டுமேட்டில் உள்ள அரசுப் பள்ளியில் திங்களன்று நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வின் போது ஆசிரியர்கள் விடைகளை எழுதிக் காட்டி மாணவர்களுக்கு உதவியதாக தெரிய வந்ததை அடுத்து அப்பள்ளியின் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை(11.03.2013) அன்று பிளஸ் 2, இயற்பியல் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அப்போது பொம்மைக்குட்டுமேடு பகுதியில் உள்ள காமராஜர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் ஆசிரியர்கள் இருவர், மாணவர்களுக்கு விடைகளை காகிதத்தில் எழுதி ஜன்னல் வழியாக காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைக் கவனித்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் தேர்வுத் துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், அப்பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்தது தேர்வுத் துறை. தொடர்ந்து வரக் கூடிய பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை, செல்லப்பம்பட்டி மேல்நிலைப் பள்ளியில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications