கடத்திய மீனவர்களில் 34 பேரை மட்டும் விடுவித்தது இலங்கை

அடுத்தடுத்து 2 நாட்களில் மொத்தமாக 53 மீனவர்களை அடித்தும், மிரட்டியும் இலங்கைக் கடற்படைக் காடையர்கள் கடத்திச் சென்ற செயல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதிப்படையச் செய்துள்ளது.
இதையடுத்து இலங்கைத் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டித்துக் கொண்டதாக ஒரு செய்தி வெளியானது. இந்த நிலையில், இன்று கடத்திச் செல்லப்பட்டவர்களில் 34 பேரை மட்டும் விடுவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
முதலில் புதன்கிழமையன்று 19 மீனவர்களைக் கடத்திச் சென்றது இலங்கைக் கடற்படை. அதைத் தொடர்ந்து நேற்று 34 பேரை கடத்திச் சென்றது. இதனால் தமிழகத்தில் கடும் கொதிப்பு நிலை ஏற்பட்டது.
இந்த செயலைக் கண்டித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதினார். உங்களது தொடர் மெளனம் இலங்கைக்கு ஊக்கம் தருவதாக உள்ளதாக பிரதமரை அவர் கண்டித்திருந்தார்.
இந்த நிலையில், 34 பேரை மட்டும் விடுவிப்பதாக இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது.அவர்களுடன் 11 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications