குஷ்பு மகள் கல்யாணத்தில் கலக்கிய திரிஷா.. பக்கத்தில் "டாப்” நடிகர்.. நிம்மதியில் விஜய் ரசிகர்கள்
சென்னை: நடிகை திரிஷா சமீபத்தில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சை இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், நேற்று கோவாவில் நடைபெற்ற குஷ்பு - சுந்தர்.சி மகள் அவந்திகா - ஷ்ரவன் சீனிவாசன் திருமணமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை குஷ்பூ மகள் திருமணம்
குஷ்புவின் மூத்த மகளான அவந்திகா, மலையாளத்தில் 'ஆரம்பம்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தற்போது தமிழில் 'அட்டாக்கர்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது நீண்டநாள் காதலரான ஷ்ரவனை நேற்று கோவாவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்தில் ராதிகா சரத்குமார், நாகார்ஜுனா - அமலா, சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், பிருந்தா மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் நடிகை திரிஷாவும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

திரிஷாவின் வருகை
ஆனால், திருமணத்தை விட சமூக வலைதளங்களில் பேசப்பட்டது திரிஷாவின் வருகை பற்றித்தான். காரணம், கடந்த சில நாட்களாகவே விஜயின் பிறந்தநாள் புகைப்படம் தொடர்பான விவாதம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்த சர்ச்சைக்கு பிறகு குஷ்பு மகள் திருமணத்தில் திரிஷா எப்படி வருவார், யாருடன் வருவார் என்ற ஆர்வமும் ஒரு தரப்பினரிடம் இருந்தது.
இதனால், திருமண புகைப்படங்கள் வெளியாகும் வரை ஒரு பகுதி விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். பின்னர் திரிஷா தனியாகவே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியதும், "இந்த முறை தேவையில்லாத சர்ச்சை எதுவும் கிளம்பவில்லை" என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நிம்மதி தெரிவித்தனர்.
கோவாவில் குஷ்பு மகள் கல்யாணம்
அதே நேரத்தில், மற்றொரு பேச்சும் சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. கோவா திருமணம் முடிந்தாலும், சென்னை வரவேற்பு நிகழ்ச்சி இன்னும் நடைபெற உள்ளது. அந்த நிகழ்ச்சியில் திரையுலகம், அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதனால், "திருமணம் அமைதியாக முடிந்தது... ஆனால் ரிசப்ஷனில் என்ன நடக்கப் போகிறதோ?" என்ற பதிவுகளும் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்றன. "இருவரும் தனித்தனியாக வந்தாலே போதும்", "மீண்டும் தேவையில்லாத விவாதங்கள் கிளம்பக்கூடாது", "ரிசப்ஷனும் எந்த சர்ச்சையும் இல்லாமல் முடிய வேண்டும்" என்று சில விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குஷ்பு மகள் ரிசப்ஷன்
முன்னதாக, குஷ்பு தனது மகளின் திருமண அழைப்பிதழை முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வழங்கியிருந்தார். அந்த சந்திப்பு புகைப்படங்களையும் பகிர்ந்த அவர், "என் அன்பு சகோதரரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் எங்களுக்கு அளித்த அன்பும் நேரமும் மறக்க முடியாதது" என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்திருந்தார்.
இதற்கிடையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக விஜய் வருவாரா என்ற கேள்வி ஒரு பக்கம் பேசப்பட்டு வரும் நிலையில், திரிஷாவும் வருவாரா என்ற ஆர்வமும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதமாகி வருகிறது.
மொத்தத்தில், கோவா திருமணம் எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக முடிந்தாலும், சென்னை ரிசப்ஷனைச் சுற்றிய எதிர்பார்ப்பும் சமூக வலைதள விவாதங்களும் இப்போதே சூடுபிடித்துள்ளன.













Click it and Unblock the Notifications