போலி பி.டெக். சான்றிதழ்: 'நான் அவனில்லை' பிட்டியின் குட்டு உடைந்தது

ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி(32). அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 26 வயது ஜெர்மனி பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் வைத்து கற்பழித்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பிட்டி உடல் நலம் சரியில்லாத தனது தாயை பார்க்க பரோலில் அதே ஆண்டில் வெளியே வந்தார். பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரை 7 ஆண்டுகாலமாக தேடி வந்த நிலையில் கடந்த வாரம் அவர் கேரள மாநிலம் கண்ணூரில் கைது செய்யப்பட்டார்.
பிட்டி கேரளாவில் ராகவ ராஜன் என்ற பெயரில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரிடம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி பெயருள்ள பி.டெக். சான்றிதழ் இருந்தது. அதில் அவருடைய பெயர் ராகவ ராஜன் என்று இருந்தது. இந்த சான்றிதழ் போலியானது என்பதை வழக்கை விசாரிக்கும் கேரள போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர் அதே கல்வி நிறுவனத்த பெயரில் பிட்டி என்ற தன் சொந்த பெயரில் பி.டெக். சான்றிதழ் ஒன்றும் வைத்துள்ளார்.
பிட்டி தான் ராகவ ராஜன் தான் என்று சாதித்ததால் அவரை அடையாளம் காண கடந்த 12ம் தேதி கேரள போலீசார் அவரை ஜெய்பூர் அழைத்துச் சென்றனர். முன்னதாக கண்ணூர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றதாகக் கூறி பிட்டி கண்ணூரில் உள்ள திருவாங்கூர் ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்துள்ளார்.












Click it and Unblock the Notifications