இஞ்சி/பூண்டு விழுது அரைக்க சத்துணவுக் கூடங்களுக்கு மிக்ஸி.. ஜெ. உத்தரவு

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பதற்காக பள்ளிகளில் சத்துணவு திட்டம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் ஒரே மாதிரியான உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே தற்கால நிலைக்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களுக்கு ஊட்டச் சத்துடன் கூடிய உணவு அளிப்பதற்காக, உணவு முறையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்தது.
அந்த வகையில் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப 13 வகை கலவை சாதங்கள் மற்றும் 4 வகையான முட்டை மசாலாக்கள் என்ற புதிய உணவு வகைகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் புதிய உணவு வகைகளான வெஜிடபிள் பிரியாணி, கருப்பு கொண்டை கடலை புலவு, தக்காளி சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம் மற்றும் கீரைச் சாதங்களுடன் மசாலா கலந்த முட்டை, மிளகு முட்டை ஆகியவைகளை தயாரிப்பதற்கான செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
சத்துணவு மையங்களில் குறைந்தது 100 முதல் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய வகை உணவுகள் தயாரிக்க, இஞ்சி/பூண்டு அரவை, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து பொடி செய்து உணவுடன் கலந்து தயாரிக்க வேண்டியுள்ளது.
மேலும் இஞ்சி/ பூண்டு விழுதினை அரைக்க ஒவ்வொரு மையத்திலும் அம்மி அல்லது ஆட்டுரல் வசதி ஏதும் இல்லை. எனவே, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்ய ஒவ்வொரு முறையும் அரவை நிலையங்களுக்கு செல்வது உணவு தயாரிப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்தும்.
எனவே புதிய வகை உணவுகள் தரமாகவும் உரிய நேரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மையத்திலும் அரவை இயந்திரம் (மிக்சி) இருக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து சத்துணவு மையங்களுக்கும், குழந்தை நல மையங்களுக்கும் பிற உபகரணங்கள் உட்பட, அரவை இயந்திரம் (மிக்சி) வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, முதற்கட்டமாக 43,787 சத்துணவு மையங்கள் மற்றும் 9,094 குழந்தைநல மையங்களில் 6 கோடியே 56 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவிலும், இரண்டாம் கட்டமாக 46,448 குழந்தை நலமையங்களில் 5 கோடியே 76 லட்சத்து 42 ஆயிரம் செலவிலும் என மொத்தம் 99,329 மையங்களுக்கு, தலா ஒரு மிக்சி வீதம் 99,329 மிக்சிகளை மொத்தம் 12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications