இஞ்சி/பூண்டு விழுது அரைக்க சத்துணவுக் கூடங்களுக்கு மிக்ஸி.. ஜெ. உத்தரவு

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சத்துணவு அளிப்பதற்காக பள்ளிகளில் சத்துணவு திட்டம், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1982 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் நல மையங்களில் ஒரே மாதிரியான உணவு பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே தற்கால நிலைக்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், அவர்களுக்கு ஊட்டச் சத்துடன் கூடிய உணவு அளிப்பதற்காக, உணவு முறையில் மாற்றம் கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்தது.
அந்த வகையில் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப 13 வகை கலவை சாதங்கள் மற்றும் 4 வகையான முட்டை மசாலாக்கள் என்ற புதிய உணவு வகைகளை சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தை நல மையங்களில் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் புதிய உணவு வகைகளான வெஜிடபிள் பிரியாணி, கருப்பு கொண்டை கடலை புலவு, தக்காளி சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம் மற்றும் கீரைச் சாதங்களுடன் மசாலா கலந்த முட்டை, மிளகு முட்டை ஆகியவைகளை தயாரிப்பதற்கான செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
சத்துணவு மையங்களில் குறைந்தது 100 முதல் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு புதிய வகை உணவுகள் தயாரிக்க, இஞ்சி/பூண்டு அரவை, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை வறுத்து பொடி செய்து உணவுடன் கலந்து தயாரிக்க வேண்டியுள்ளது.
மேலும் இஞ்சி/ பூண்டு விழுதினை அரைக்க ஒவ்வொரு மையத்திலும் அம்மி அல்லது ஆட்டுரல் வசதி ஏதும் இல்லை. எனவே, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து பொடி செய்ய ஒவ்வொரு முறையும் அரவை நிலையங்களுக்கு செல்வது உணவு தயாரிப்பதில் காலதாமதத்தை ஏற்படுத்தும்.
எனவே புதிய வகை உணவுகள் தரமாகவும் உரிய நேரத்திலும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மையத்திலும் அரவை இயந்திரம் (மிக்சி) இருக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகும்.
இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து சத்துணவு மையங்களுக்கும், குழந்தை நல மையங்களுக்கும் பிற உபகரணங்கள் உட்பட, அரவை இயந்திரம் (மிக்சி) வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, முதற்கட்டமாக 43,787 சத்துணவு மையங்கள் மற்றும் 9,094 குழந்தைநல மையங்களில் 6 கோடியே 56 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் செலவிலும், இரண்டாம் கட்டமாக 46,448 குழந்தை நலமையங்களில் 5 கோடியே 76 லட்சத்து 42 ஆயிரம் செலவிலும் என மொத்தம் 99,329 மையங்களுக்கு, தலா ஒரு மிக்சி வீதம் 99,329 மிக்சிகளை மொத்தம் 12 கோடியே 36 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவில் வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications