நெல்லை சித்த மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் குதிப்பு

இலங்கையில் தமிழர்களை கொன்று குவிந்த அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தனி ஈழம், இலங்கைக்கு எதிராக ஐநாவில் இந்தியா திர்மானம் கொண்டு வரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர். பட்டமேற்படி டாக்டர் ரவிக்குமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் காத்தவராயன், தம்பித்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பட்ட படிப்பு மாணவ, மாணவிகள் 500 பேர், பட்டமேற்படிப்பு மாணவர்கள் 180 பேர் பயிற்சி டாக்டர்கள் 100 பேர், உள்ளிட்ட 700ககும் மேற்பட்டோடர் கலந்து கொண்டுள்ளனர்.
வேண்டும், வேண்டும் தனி ஈழம் வேண்டும், தண்டனை வழங்கு, தண்டனை வழங்கு, ராஜபக்சேவுக்கு தண்டனை வழங்கு, நிறைவேற்று, நிறைவேற்று இந்திய அரசே ஐநா அவையில் தீர்மானம் நிறைவேற்று ஆகிய கோஷங்களை எழுப்பினர். மேலும் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
கோலார் தங்க வயல் பகுதியில் உண்ணாவிரதம்
கர்நாடாக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழீழத்திற்கான வாக்கெடுப்பை நடாத்த கோரியும், சர்வதேச விசாரணை கோரியும், தமிழகத்தில் தன்னெழுச்சியாக போராடும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.
ஹைதராபாத்தில்
ஹைதராபாத்தில் இன்று மாலை 6 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, பேரணி நடைபெறுகிறது. மாதப்பூர் என்ற இடத்தில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 21-ந்தேதி 40 எம்.பி.க்கள் அலுவலகங்களிலும் மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications