இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று(ஞாயிற்றுக்கிழமை ) கைது செய்தனர்.
இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி பிடித்துச் செல்வதாக அடிக்கடி புகார் எழுந்த வண்ணம் உள்ள நிலையில், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மார்ச் 3-ம் தேதி பிடித்துச் சென்றனர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 8 நாள்களுக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து 48 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பகுதில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் சிலர் ஒரு படகில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படைக்கு கண்டனர். இதையெடுத்து, இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான நாகி தேவி கப்பல் அந்த படகை ஞாயிற்றுக்கிழமை பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தது.
பின்னர், படகை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர் அதில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களையும் கைது செய்து தூத்துக்குடிக்கு அழைந்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கடலோர காவல் படை கட்டளை அதிகாரி அனந்தகுமார் கூறும்பொழுது, 'இந்திய கடல்பகுதியல் நுழைந்து மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை கைது செய்துள்ளோம. அவர்கள் பயன்படுத்திய விசைப்படகும், அதில் இருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அனைவரும் திங்கள்கிழமை காலை தெர்மல்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவர்' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications