ஆம்லேட் லேட்டானதற்காக ஹோட்டலை துவம்சம் செய்த 2 பேருக்கு 30 நாள் ஜெயில்!
ஈரோடு: ஆம்லேட் ஆர்டர் செய்து, அது வர தாமதமானதால் ஹோட்டலை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த இரண்டு பேருக்கு 30 நாள் சிறைக் காவல் விதித்து ஈரோடு கோர்ட் உத்தரவிட்டது.
ஈரோடு மாநகராட்சி புறநகர் பகுதியான வில்லரசம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரும் இவரது மனைவி தங்கமணியும் சேர்ந்து மெஸ் நடத்தி வந்தனர்.
கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதியன்று பாரதி, கணேசன் என இரு இளைஞர்கள் இந்த மெஸ்சுக்கு சாப்பிட வந்தனர். ஆம்லேட் ஆர்டர் செய்து காத்திருந்தனர். ஆனால் ஆம்லேட் வர சற்று தாமதமானதால் கோபமடைந்த அவர்கள் தங்கமணியிடம் தகராறில் இறங்கினர். அதை அவர் தட்டிக்கேட்டார். இதையடுத்து மெஸ்ஸை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டனர்.
இதையடுத்து தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு இத்தனை காலமாக நிலுவையில் இருந்து வந்தது. நேற்றுதான் இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சர்வமங்களா, இருவருக்கும் தலா 30 நாள் சிறைக் காவல் மற்றும் தலா ரூ. 8000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications