அறிவாளிக் குழந்தைகளை உருவாக்கும் முயிற்சியில் குதித்துள்ள சீனா
பெய்ஜிங்: அறிவாளி குழந்தைகளை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் சக்திமிக்க நாடாக உருவெடுக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் அறிவாளிக் குழந்தைகள் பிறக்க வழி வகை செய்யும் ஆராய்ச்சியில் அந்நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். உலகில் உள்ள அறிவாளிகள் 2,000 பேரின் டிஎன்ஏக்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஎன்ஏக்களை வைத்து அறிவுத்திறனை நிர்ணயிக்கும் மரபியல் கூறுகளை கண்டறியும் முயற்சியில் பெய்ஜிங் ஜெனோமிக்ஸ் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிந்த பிறகு பெற்றோர்கள் தங்களுக்கு பிடித்த கருமுட்டையை தேர்வு செய்யலாம்.
இந்த ஆய்வின் மூலம் ஒவ்வொரு தலைமுறையினரின் ஐ.க்யூ 15 புள்ளிகள் வரை அதிகரிக்கும். சீன சட்டப்படி ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். அந்த குழந்தையும் அறிவாளியாக இருக்க சீனா முயற்சி செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications