டெல்லியில் அரசுக்கு ஆதரவு வாபஸ்... சென்னையில் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ திடீர் ரெய்ட்!!

Subscribe to Oneindia Tamil

Stalin
சென்னை: இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்ட நிலையில் திடீரென திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் கடுமையான திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. ஆனால் மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இதனால் மத்திய அரசுக்கான ஆதரவை திமுக விலக்கிக் கொண்டது.

இந் நிலையில் டெல்லியில் இருந்து 7 அதிகாரிகள் கொண்ட சி.பி.ஐ. குழு இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தனர். நேராக கார்களில் தேனாம்பேட்டை சென்டாப் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்த ஆரம்பித்தனர்.

காலை 7.15 மணிக்கு அவர்கள் சோதனையை தொடங்கினார்கள். அந்த சோதனை 9 மணி வரை நீடித்தது.

மு.க.ஸ்டாலினின் நண்பர் ராஜாசங்கரின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிபிஐ அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் 19 இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டனர்.

வெளிநாட்டில் இருந்து கார் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு (department of revenue intelligence) தந்த தகவலின் பேரி்ல் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன் புலனாய்வுப் பிரிவு கேள்வி எழுப்பியதாகவும், அப்போதே அதற்கான விளக்கத்தை தந்துவிட்டதாகவும் ஸ்டாலின் தரப்பு கூறுகிறது.

இப்போது வேண்டுமென்றே முடிந்து போன ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டிப் பார்ப்பதாக திமுக கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+