ஆந்திராவில் போலீஸ் போல நடித்து கற்பழிப்பு 4 வாலிபர்கள் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் போலீஸ் என்று கூறி மைனர் பெண்ணைக் கற்பழித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பிரகாசம் மாவட்டம், சிங்கார்கோண்டா கிராமத்தைச்சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், தனது உறவினருடன் கோவில் விழாவில் கலந்து கொண்டு விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இருவரும் வழியில் இருந்த குழாயில் குடிப்பதற்காக தண்ணீர் பிடித்தனர். அப்போது அங்கு அமர்ந்திருந்த நான்கு பேர் இவர்களிடம் போலீஸ் என்று கூறி விசாரணை செய்தனர்.
அவர்களும் விவரங்களை கூறவே மூன்றுபேரை உறவினரை பிடித்து வைத்துக்கொண்டனர். ஒருவன் இளம்பெண்னை மறைவான இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். நான்கு பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்தனர். இதனால் அந்தப் பெண் கதறி அழுதார்.
சத்தம் கேட்டவுடன் அந்த வழியாக சென்ற மாணவர்கள் சிலர் பெண்ணை காப்பாற்ற முயற்சித்தனர். இதனை பார்த்த வாலிபர்கள், அவர்கள் மீது கற்களை வீசி எறிந்து விரட்டிவிட்டு தப்பி ஓடினர்.
உடனடியாக பொதுமக்கள் ரோந்து வந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரட்டிச் சென்று நான்கு பேரையும் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் உண்மையான போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் என்று கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது, வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications