அமைச்சர் பச்சைமாலின் கட்சி பதவி பறிப்பு: குமரி அதிமுக செயலாளராக நாஞ்சில் முருகேசன்- ஜெ. அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பச்சைமாலிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளராக நாஞ்சில் முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக அவைத் தலைவராக சிவ.குற்றாலம், மாவட்ட செயலாளராக நாஞ்சில் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக எஸ்.ஸ்டீபன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் இணை செயலாளராக டி.மனோகரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட அதிமுக செயலாளராக இதுவரை பச்சமால் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அமைச்சர் பச்சைமாலிடம் உதவியாளராக இருந்த சகாயத்துக்கும், வனத்துறை ஊழியர் ஆறுமுகத்துக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் 2011ம் ஆண்டு ஆறுமுகம் அவரது மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் மர்மான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் சகாயம், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று ஜெகதீஸ்வரியின் தாயார் குமாரி உள்பட 4 பேர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந் நிலையில் தான் அமைச்சர் பச்சைமாலிடம் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+